Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks
Showing posts with label பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம். Show all posts
Showing posts with label பெண்களின் திகைக்க வைக்கும் தாம்பத்ய ஆர்வம். Show all posts

Tuesday, October 23, 2012

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!! (புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)



இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜி’ என்ற அமைப்பு சென் னை யில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திரும ணமான பெண்களின் செக்ஸ் ஆர் வம்- அதில் அவர்களது விருப்பங் கள்- வெறுப்புகள்- செக்சில் அவர் களது எதிர்பார்ப்புகள்’ போன்றவை களைப் பற்றி புதிய சர்வே ஒன் றினை எடுத்துள்ளனர். அந்த சர்வே யை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொ ண்ட சர்வே, திருமணமான பெண் களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப் படுத்துகிறது. அதில் சில சிந்திக்க வைக் கும் விதத்தில் உள்ளது. “இந்த மாதிரி யான கருத்துக் கணிப்புகளை பொதுமக் கள் படிக்கும்போது பெண்களின் மாறிவ ரும் மன நிலையையும், மாறிவ ரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்க படி தங்கள் மண வாழ்க்கையை அமைத் துக் கொள்வார்கள்” என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளி யிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்’ முக்கிய விவ ரங்கள் இங் கே தரப்படுகின்றன.
`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமா னது’ என்ற கருத்து தமிழக பெண்களிடம் இப் போதும் வேரூன்றி இருக்கிறது. கணவரு க்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுது போக்கு வா ய்ப்புகள் மிக குறைவாக இருப்ப தால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயது வாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல் லி, மும்பை போன்ற நக ரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுது போக் குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம் பத்யதொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.
68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மாத த்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியி ருக்கிறார்கள். மீத முள்ள வர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின் பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீத முள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாத த்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக் கிறார்கள்.
`தாம்பத்ய தொடர்பில்’ உள்ள நிறை குறை களை கணவரிடம் விவா திக்கும் விஷயத் தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந் திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கி றார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காது’ என்று 42 சதவீத பெண் கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த் துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின் றி பேசுவோம்’ என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது’ என்று பட்டவ ர்த்தனமாக கருத்து தெரி வித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம் பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம் விட்டுப் பேசுவதாக’ கூறி யிருக்கிறார்கள்.
உறவுக்கு முந்தைய `முன்விளை யாட்டுகள்’ விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவ தாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுக ளை திகைக்க வைத்திருக்கிறார் கள். 92 சதவீதம் பேர் அதை விரும் புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவ தாகவும் கூறியிருக்கிறார்கள். டெ ல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள்  மூன்றாம்இடத்தையும் பிடிக் கிறார்கள்.
ஆசையை வெளிப்படுத்தி, தா ம்பத்யத்திற்கு கணவரை அ ழைப்பதில் இன்னும் பெண்க ள் பழைய நிலையிலே இரு ப்பதாக சர்வே குறிப்பிடுகி றது. 81 சதவீத பெண்கள் கண வரின் விருப்பமே அதில் தொ டக்கமாக இருக்கி றது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலு வலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து – சீக்கிரம் வந்து விடுங்கள் உங்களுக்காக காத்திருக்கி றேன்-’ என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல் கிறா ர்கள். `மாத வில க்கு முடிந்த அடுத்த சில நாட் களில் இய ல்பாகவே ஆசை அதிகரிக் கும். அப்போது ந டை, உடை, பேச்சு மூலம் எளிதாக கண வரை ஈர்த்து தயாராக்கி விடு வோம்’ என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக் கிறார்கள்.

பின்விளைவற்ற கருத்தடை சாதனமா க பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பய ன்படுத்தக்கூறுவோம்’ என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கரு த்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடு வோம்’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அத னால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்’ என்கிறார்கள். முதல் குழந் தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாது காப்பான கருத்தடை முறையாக `கா ப்பர்- டி’ பொருத்துவதை குறிப்பிட்டி ருக்கிறார்கள்.
திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கி றார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக் கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட் டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந் திரமய வாழ்க்கையால் பெண்கள் முழு மனதோடு உறவில் ஈடுபடுவது குறை ந்து வருகிறது. குழந்தைகள் பற்றி யோ, பண நெருக்கடி பற்றியோ, வே லை பார்க்கும் இடங்களில் உள்ள சிக் கல் பற்றியோ, கணவரால் ஏற் படும் பொதுவான குறை பாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக் கொள்வதால் அவர்கள் முழு மன தோடு உறவில் ஈடுபடுவதில் லை. அதனால் தம்பதிகள் இருவருக்கு மே அதில் திருப்தி ஏற்படாமல் போ ய் விடுகிறது. திருப்தியின்மை யால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகி றார்கள். அது கோபமாகவும், சில நேரங்க ளில் பகையாகவும் மாறு கிறது…”- என்கிறார்.
சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினை ப்பார்கள்?

-`நாளை என்ன சமையல் செய்வ து?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்.
- `இந்த நேரம் பார்த்து குழந்தை விழி த்துவிட்டால் என்ன செய்வது?’ என் ற கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்.
- `இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள்கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.
கணவரோடு செக்ஸ் வைத்து க்கொள் வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன் றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடை த்திருக்கும் பதில் சுவாரஸ்ய மானது.
51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்’ என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவ ரோடு ஜோடியாக நடனம் ஆட வே ண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை’ என்று கூறியிரு க்கிறார்கள். மீத முள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கா ர்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவினைத் தொடர்வோம்’ என்கி றார்கள்.
தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்க ளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..
- `எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணை ந்த ஜோடிபோல் குதூகலமாய் வா ழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என் று 37 சதவீத பெண்கள் கூறியி ருக்கிறார்கள்.
- அவ்வப்போது ஏற்படும் உடல் வலி யும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார் கள்.
- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத் தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறி யிருக்கிறார்கள்.
- பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து ள்ளனர்.
- மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவரு க்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தி யையும், நம் பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத் தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.