Please Wait for 5 Sec and Press Skip AD then Continue Reading the Stories so We able to develop our Web Easily Thanks

Sunday, September 21, 2014

செக்ஸ் அடிமை

குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் - பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள் 
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல் 
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம்.  இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் - மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். 

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன. 

எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். 

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது. 

* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது. 

* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும். 

* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும். 

* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும். 

* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.
* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும். 

* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.  

* கணவன் - மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான். 

* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும். 

* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். 

* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும். 

* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை. 

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். 

* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும். 

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும். 

குறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம். 

கலவியில் முத்தம்

தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.

கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.

ஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.

நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் - பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.

நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் - பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி

அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுபப்களை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதை விலாவரியாக விவரிக்கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத்தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்தாதது தான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம் போல் நடை உடையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானையை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உடல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி, போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மத கலையாகும்.

இந்த மன்மத கலையை ஆண்கள் அறிந்து எந்த நிலையில் என்ன மாதிரியான முன் விளையாட்டுகளை செய்ய வேண்டுமோ அதைச் செய்து நாயகியுடன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம். 
ஆடவர்களை முயல், காளை, குதிரை, என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களுக் குஇன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த  உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் - பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெண்ணுடன் ஆண் கூடும் போது அவளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் - பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் - பெண் ஒன்று சேரும் போது தான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகிறது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம் பெண், ஐம்பத்தைந்துககு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெண்களுடன் கூடும் போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.

காமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்

விரல் நகங்களால் ஆண் அல்லது பெண்ணின் உடல் உறுப்புகளை கீறுவது அல்லது அழுத்தும் படியாக பதிப்பதே நகக்குறி எனப்படும். நீண்ட நேரம் காமத்துக்கு காத்திருந்த துணை தாமதமாக வரும் துணையின் மீது நக்குறி பதிக்க சரியான தருணம் ஆகும். அதே போல் நீண்ட நாள் பயணத்துக்கு பிறகு அல்லது பிரச்சினைகளால் ஏற்பட்ட சண்டைக்கு பிறகு எல்லாம் நகக்குறி காமத்தை தூண்டிவடுவதாக அமைகிறது. பெரும்பாலும் காம இச்சை அதிகம் கொண்டவர்களே நகக்குறி பதிப்பவர்களாக இருக்கிறார்கள். 

அக்குள், மார்பகம், கழுத்து, முதுகு, இடுப்பு, தொடை, போன்ற இடங்களில் தான் நகக்குறி அதிகமாக பதிக்கப்படுகிறது. ஆனாலும் காம இச்சை அதிகமான பிறகு உடலின் எந்தபகுதியிலும் பதிக்கலாம். இஷ்டப்படி நடந்து கொள்ளலாம். 

நகக்குரியானது நினைவுச் சின்னமாக ஆண் - பெண்ணால் ரசிக்கப்படுகிறது. ஒருவரது நினைவானது கலவி முடிந்த பிறகும் நளெல்லாம் நிலைத்திருக்க இந்த நகக்குறி உதவுகிறது. அதை பார்க்கும் போதெல்லாம் காம இச்சை பீறீட்டு கிளம்பும். தனிமையில் அந்த இடங்களை தொட்டு பார்த்தே சந்தோஷம் அடைபவர்கள் உண்டு. பெண்களின் மார்பகத்தில் தான் பெரும்பாலும் நகக்குறி பதிக்கப்படுகிறது. ஆண்களுக்கு தொடைகளில் நகக்குறி பதிக்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான நகக்குறிகள் அதிக அளவிலான காமத்தை குறிக்ககூடியது.

வயது கூடக்கூட உடலுறவில் ஆர்வம் குறைந்து விடும் என்பது உண்மையா?

செக்ஸ் பற்றி நிலவும் தவறின கருத்துக்களில் இதுவும் ஒன்று. ஆர்வம் அதிகரிக்கும் என்பது மட்டுமல்ல. பூரணமான திருப்தியும் கிடைக்கும் என்பதே உண்மை. மேலை  நாடுகளில் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வல்லுநர்கள் அனைவரும் இதை ஆமோதிக்கிறார்கள்.அமொரிக்காவில் செக்ஸ் தெரபி மற்றும் ரிசர்ச்  சொசைடியைச் சேர்ந்த சாலி சுமாச்சர் சொல்கிறார்ச் நடுவயதை அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் எவ்விதத்திலும் செக்ஸ் ஈடுபாட்டைப் பாதிப்பதில்லை.  இங்கு வந்த 40 வயதுகளில் உள்ள பல தம்பதியினர் முன்னெப்போதையும்விட இந்த வயதில்தான் உடல் சுகத்தை முழுமையாக அனுபவிப்பதாகச் சொன்னார்கள்.  இளவயதில் திருமணமான போது இருந்த ஆர்வமும் வேகமும் இப்போது தணிந்திருக்கிறது. ஆனால் முன்னெப்போதையும்விட இந்;த வயதில்தான் தாம்பத்ய சுகத்தை  பூரணமாக உணர்கிறோம் என்கிறார்கள் இவர்கள்.

பெண்களுக்கு 50வயதை நெருங்கும்போது மாதவிடாய்முற்றிலுமாக நின்று அவர்களின் உடலில் மாற்றங்கள் ஏற்படுகிறது. நாற்பதுகளின் நடுவிலேயே மாதவிடாய் நிற்கப்  போவதற்கான அறிகுறிகள் தோன்றி மேலும் நான்கைந்து வருடங்கள் சீரற்ற முறையில் அது தொடரும். இச்சமயத்தில் பெண் உறுப்பின் உட்புறச் சுவர்கள் வறண்டதாகவும்,  மெல்லியதாகவும் ஆகிவிடும். மோக வயப்படும்போதுகூட பெண் உறுப்பின் திரவங்கள் மெதுவாகவே கசியும். அறியாமையால் ஆண் முரட்டுத் தனமாக உறவு கொண்டால்  இவ்வயதுடைய பெண்களுக்கு அது வலியை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க எண்ணெயோ அல்லது இதற்காகவே விற்பனைக்கு இருக்கும் திரவங்களையோ  பயன்படுத்தலாம்.

ஆண்களின் உடலில் மாற்றங்கள் நாளடைவில் ஏற்படுகிறது. 20-30 வயதுகளில் இது அதிகபட்சமாக சுரக்கிறது. அந்த வயதுக்கு மேல் அது மெதுவாகக் குறையத் தொடங்கும்.  இரத்த ஓட்டம் மந்தப்படுவதால் உறுப்பின் விரைப்பு குறைவாக இருக்கும். 30-லிருந்து 60 வயதை அடையும் போது டெஸ்டோஸ்டெரோன் அளவு குறைந்துவிடுகிறது என  பிரெஞ்சு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதனால் செக்ஸில் ஆர்வமும் ஈடுபாடும் குறையலாம் என்றாலும் அதில் ஈடுபடும் போதுகிடைக்கும் சுகத்தில் எந்தக்  குறையும் இருக்காது என்று நியூயார்க் சினாய் மருத்துவக்கல்லூரி ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.

மாதவிலக்கு

பெண்கள் தங்கள் உடலை மிகவும் அசிங்கமாக நினைப்பதற்கு மிக முக்கியமான ஒரு காரணம் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் மாதவிலக்கு. இனப்பெருக்கத்துக்கான காலகட்டத்தில் ஒரு பெண் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் அவளுடைய கர்ப்பப்பையில் இருந்து பிறப்புறுப்பு வழியாக உடலைவிட்டு ரத்தம் வெளியேறும். மூன்று முதல் ஐந்து நாள்களுக்கு இப்படி ஏற்படுவதற்கு மதவிலக்கு என்று பெயர். உடல் நல்ல நிலையில் இருப்பதற்கு அடையாளம் தான் மாதவிலக்கு. இதன் அடிப்படையில் தான் கருத்தரிப்பதற்கு உடல் தயாராகிறது. 

மாதவிலக்கு சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படலாம். ரத்தபோக்கு வரும் முதல்நாள் இது தொடங்குகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை இந்த ரத்தபோக்கு ஏற்படும். இதுவே மாதவிலக்குசுற்று என கணக்கிடபடுகிறது. ஆனால் சில பெண்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை கூட மாதவிலக்கு ஏற்படும். சில பெண்களுக்கோ 45 நாட்களுக்கு ஒரு முறை தான் இது நிகழும். மாதவிலக்கு சுற்றின்போது சினைப்பையில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும். 

மதசுற்றின் முதல்பாதியில் பெரும்பாலும் சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் தான் சுரக்கும். இதனால் கருப்பையின் உள்பக்க சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களால் ஆன மிருதுவான படலம் உருவாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்து குழந்தை உருவானால் அது சுகமாக இருப்பதற்கான ஏற்பாடுதான் இந்த மிருதுவான படலம். 

மிருதுவான படலம் தயார் ஆனதும் ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஃபெலோப்பியன் குழாய் வழியாக கருப்பையை அடையும். அப்போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப்பாள். அந்த சமயத்தில் ஆணும் பெண்ணும் உடலுறவு கொண்டால் முட்டையோடு ஆணின் உயிரணு சேர வாய்ப்பு உண்டு. இது தான் கருத்தரித்தல் ஆகும். கர்ப்ப காலத்தின் தொடக்கமும் அதுதான். மாதச்சுற்றின் இரண்டாம் பாகத்தில் அதாவது அவளது அடுத்த மாதவிலக்கு தொடங்கும் வரை அவள் உடலில் புரோஜெஸ்டீரோன் ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோனும் கருத்தரிதலுக்கு ஏதுவாக கருப்பையின் மிருதுவான உள்சுவரை உருவாக்குகிறது. 

பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்தரிக்காது என்பதால் கருப்பையின் சுவர்படலத்துக்கு தேவை இருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். இதன விளைவாக சுவர்படலமானது உடைந்து சிதைந்து மாதவிலக்கின் போது கருப்பையில் இருந்து வெளியேறும். இது புதிய மாதாந்திர சுற்றின் தொடக்கமாகும். மாதவிலக்கு நின்றவுடன் சினைப்பைகள் சுவர்படலத்தை உருவாக்கும். 

பெண்களுக்கு வயதாகி மதவிலக்கு முற்றிலுமாக நிற்பதற்கு முன் ரத்தபோக்கு அடிக்கடி ஏற்படலாம். ரத்த போக்கின் அளவும், இளமையாக இருந்த போது ஏற்பட்டதை விட அதிகமாக இருக்கலாம். மாதவிலக்கு நிற்கபோகும் காலத்தில் மாதவிலக்கு சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம். இதை அசுத்த ரத்தமாக நினைத்து பெண்களே தங்களை தாழ்த்தி கொள்வார்கள். இது உடலின் இயல்பான ஒரு செயல் என்று ஏற்றுக்கொள்வதே பெண்களுக்கு உரிய கடமையாகும்.

ஏன் வேண்டும் உச்சகட்டம் ?

தன்னுடைய உடலில் எவ்வளவோ இன்பம் பொதிந்து கிடக்கிறது என்ற உண்மை தெரியாமல் அல்லது தெரிந்தும் அதை அனுபவிக்க முடியாமல் இவ்வளவு காலமும்  பெண்கள் கட்டுப்படியாக இருந்துவிட்டார்கள். ஆனால் இன்று வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டி, இணையதளம், தொலைபேசி மூலமாகத் தெரியாத பல  விஷயங்களையும் புரியவைத்திருக்கிறது விஞ்ஞானம். அதனால், இவ்வளவு காலம் இருந்ததுபோல் இனியும் பெண்கள் ஏமாளியாக இருக்கபோவதில்லை என்பதுதான்  உண்மை. தன்னுடைய இன்பத்தை மட்டும் பெண்களில் உடலில் தித்துக்கொண்ட ஆண்கள், இனியும் அப்படியே சுயநல வாதிகளாக இருக்க முடியாது. பெண்களும் இன்பம்  வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காகப் போராடவும் தொடங்கிவிட்டார்கள். பெண்களுக்கு இன்பம் கிடக்காதபட்சத்தில், ஆண்களுக்கும் இன்பம்  கிடைக்கப் போவதில்லை என்பதுதான் இன்றைய நிலை. அதனால் செக்ஸ் இன்பம் இனி பரஸ்பரம் இருவரும் அனுபவிப்பதாகவே இருக்க வேண்டும்.


ஒவ்வொரு கலவியின்போதும் ஆண்கள் எளிதில் உச்சகட்டம் அடைந்துவிடுகிறார்கள். அதுபோல் உச்சகட்டத்தை எதிர்பார்க்கிறார்கள். அதற்க்கு உதவி செய்ய வேண்டியது  ஆண்களின் கடமையாகும். இந்த செயல் பாடுகளில் இருந்து ஆண்கள் தவறினால் அல்லது தவிர்த்தால், குடும்பம் உறவு சிதையும் சூழல் உருவாகிவருகிறது. அதனால்தான்,  இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் குடும்ப வசக்குகள் பெரும்பாலும் ஆண்களால் திருப்திப்படுத்த இயலவில்லை என்ற குற்றச் சாட்டுகளுடனே வருகின்றன

இன்றைய தினம், பல்வேறு காரணங்களைக் காட்டி விவாகரத்து பெற இயலும் :

1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறு ஓயருவருடன் விரும்பி உடலுறவுகொள்ளுதல்.

2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமை செயல்.

3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குக் கைவிட்டுச் செல்லுதல்.

4. தம்பதிகளில் ஒருவரு தீர்க்கமுடியாத அளவில் ம நோய்க்கு ஆளாதல்.

5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருத்தல்.

6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து எழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா, இல்லையா என்று தெரியாதிருத்தல். 

7. திருமணமான கணவன், ஓரினப் புணர்ச்சி மற்றும் விலங்குகளுடன் புணர்ச்சி வைத்திருத்தல்.

8. ஆண்மையற்று இருத்தல் அல்லது பெண்ணைத் திருப்திப்படுத்த முடியாத நிலையில் இருத்தல். 

9. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனைச் சட்டத்தில் செயள்ளப்பட்டுள்ள குற்றம் ஒன்றுக்காக ஏழு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை பெறுதல் போன்ற  சூழ்நிலைகளில் மணமுறிவு (விவாகரத்து) கேட்டு மனு செய்யலாம்.  

விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்...

உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ்  என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன. 

ஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். 

உணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்தணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும். 

Saturday, September 13, 2014

மாதவிலக்குக்கு உலர் திராட்சையில் தீர்வு

During the premenstrual women more pain, more bleeding, constipation, etc., are likely to occur.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக வயிற்றுவலி, கூடுதல் ரத்தப்போக்கு, மலச்சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மாதவிலக்கின்  போது ஏற்படும் பிரச்னைகளுக்கு இன்று பல்வேறு ஆங்கில மருத்துவங்கள் உள்ளது. இருப்பினும் ஆங்கில மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும்  வாய்ப்புகளும் உள்ளது. தற்போதைய நாகரீக உலகில் அனைவரும் ஆங்கில மருந்துகளையே பெரிதும் நாடுகின்றனர். ஆனால் இயற்கை நமக்கு  அளித்துள்ள காய்கனி வகைகள் நோய்களை போக்கும் அரிய மருந்தாக இருப்பதை இன்று பெரும்பாலானவர்கள் மறந்துவிட்டனர். 

மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலி பிரச்னைக்கு சமையலுக்கு பயன்படுத்தும் உலர் திராட்சைகளை பயன்படுத்தலாம். பொதுவாக கறுப்பு,  பச்சை திராட்சைகள், பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, விதையில்லா திராட்சை என பலவகைகள் உண்டு. இவை  அனைத்திலும் “வைட்டமின் பி” சத்துகள் அதிகம் உள்ளது. இவ்வகை திராட்சைகளை காட்டிலும், உலர் திராட்சையில் “வைட்டமின் பி, சுண்ணாம்பு”  சத்துகள் அதிகம் உள்ளது. இந்த சத்துகள் மாதவிலக்கின் போது பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலி பிரச்னையை போக்கும். 

இதை அப்படியே சாப்பிடக்கூடாது. உலர் திராட்சையை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின்னர் அதில் இருக்கும் திராட்சைகளை நன்கு பிழிய  வேண்டும். உலர் திராட்சை கலந்த நீர் கசாயம் போல் மாறும். இதை மாதவிலக்கு உள்ள பெண்கள் குடிக்கும் போது வயிற்றுவலி பறந்து போகும்.  உலர் திராட்சை பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்றுவலிக்கு மட்டும் மருந்தல்ல, இதை காட்டிலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு  அதிக சக்தியை தரும் ஒரு மருந்தாகவும் இது உள்ளது. பெண்களின் கருவில் வளரும் குழந்தைக்கு தேவையான சக்தி மற்றும் ஊட்டச்சத்துகள்  அனைத்தும் தாயின் மூலம் கிடைக்கும். 

இதனால், தாயின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் பெண்கள் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்து  வருவதன் மூலம் அதிக ஊட்டசத்தையும், ஆரோக்கியத்தையும் பெறலாம். இதனால், குழந்தை மிகவும் ஆரோக்கியமாக பிறக்கும். உலர் திராட்சையை  பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால், எடைகுறைவான குழந்தை பிறக்க வாய்ப்புகள் குறைவதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தினமும் உலர் திராட்சையை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவு பெற்று, இளமை தோற்றத்துடன் காட்சியளிக்கும். 

Thursday, September 04, 2014

கர்ப்பக் கால கவனிப்பு!

* கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

* கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.

* கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

* வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

* பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

* கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல… உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. தாய்லாந்தில் தாயாகப் போகிறவரின் தினசரி உணவில் வாழை ரெசிபிக்கள் விதவிதமாக இருக்கும்.

* கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.

* கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

* தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

* பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.

* சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளைவாதத்தைக்கூட கொண்டு வரக்கூடும்.

* வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.

* குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்.

* தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6 மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்.

* தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

* குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.

* குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.